ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படம் 'தலைவி'. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரணவத்தும், எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர்.
இந்த மாதம் ஏப்ரல் 23ம் தேதி இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் மகாராஷ்டிராவில் வார இறுதி நாட்களிலும், இரவு நேரங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்களை முழுமையாக மூடச் சொல்லியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால், அங்கு புதிய படங்களின் வெளியீடு பாதிக்கப்பட்டுள்ளது. 'தலைவி' படத்தை ஹிந்தியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதால் தற்போது ஏப்ரல் 23ம் தேதி மகாராஷ்டிராவில் வெளியிட முடியாது.
தமிழ், தெலுங்கில் மட்டும் வெளியிட்டு ஹிந்தி வெளியீட்டைத் தள்ளி வைக்க வேண்டும். அப்படி செய்வார்களா என்பதை தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்ய வேண்டும். ஏற்கெனவே ராணா டகுபட்டி நடித்த 'காடன்' படத்தையும் தமிழ், தெலுங்கில் வெளியிட்டு, ஹிந்தியில் தள்ளி வைத்துவிட்டனர்.
ஒரு வேளை 'தலைவி' படத்தை ஒரே சமயத்தில் வெளியிட முடிவு செய்தால் தமிழ், தெலுங்கில் ஏப்ரல் 23ம் தேதி வெளியாவது சந்தேகம்தான்.