தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி, சென்னை-28 படம் மூலம் பிரபலமானவர் நடிகர் ஜெய்.. சினிமாவில் 15 வருடங்களை கடந்துவிட்ட ஜெய், தேர்தல் நாளான நேற்று தனது 38வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த பிறந்தநாளன்று அவரே எதிர்பாராத வகையில் சர்ப்ரைஸாக நேரிலேயே வந்து, ஜெய்யின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு அவருக்கு கேக் ஊட்டி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிம்பு.
சிம்புவை தனது துவக்க காலம் தொட்டே ஆதர்ச வழிகாட்டியாக, அண்ணனாக பின்பற்றி வரும் ஜெய், சிம்புவின் இந்த அதிரடி வருகையால் நெகிழ்ந்து விட்டார். இதுகுறித்து கூறியுள்ள ஜெய், “முற்றிலும் எதிர்பாராத மகிழ்ச்சியான இன்ப அதிர்ச்சியாக இருந்தது. எனக்காக நேரம் ஒதுக்கி நீங்கள் வந்ததில் எனக்கான சந்தோசம் அளவிட முடியாதது. என்னுடைய பிறந்தநாளை இன்னும் சிறப்பான நாளாக்கியதற்கு நன்றி” என கூறியுள்ளார் ஜெய்.
ஜெய்யின் மீது கொண்ட பாசத்தால், தான் நடித்த வேட்டை மன்னன் படத்தில் அவரையும் தன்னுடன் இணைந்து நடிக்க வைத்தார் சிம்பு.. ஆனால் சில காரணங்களால் அந்தப்படம் சில நாட்களிலேயே கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.