இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்(86), கொரோனா அறிகுறி உடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் வெகு சில இயக்குனர்களே கமர்ஷியலாக தொடர்ந்து படங்கள் இயக்கி, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலம் சினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய இவர், சிவாஜி, ஜெய்சங்கர், சிவக்குமார், முத்துராமன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரை வைத்துபடங்களை இயக்கி உள்ளார். இதுவரை 72 படங்களை இயக்கியுள்ளார். இதில் ரஜினியை வைத்து மட்டும் 25 படங்களை இயக்கி, அவற்றை பெரும்பாலும் வெற்றி படங்களாக கொடுத்துள்ளார் உள்ளார்.
ரஜினியின் சினிமா பயணத்தில் எஸ்.பி.முத்துராமனின் பங்கு இன்றியாமையாதது. கடைசியாக தொட்டில் குழந்தை என்ற படத்தை இயக்கினார். அதன்பின் படங்களை இயக்கவில்லை. சினிமா தொடர்பான நிகழ்வுகளில் மட்டும் கலந்து கொண்டு வந்தார்.
இந்நிலையில் 86 வயதை கடந்துவிட்ட எஸ்.பி.முத்துராமனுக்கு நேற்று உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து இதையடுத்து சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு முதலில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் லேசான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. தற்போது அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை : ‛‛கொரோனா அறிகுறிகளுடன் எங்களது மருத்துவமனையில் எஸ்.பி.முத்துராமன் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து அவரின் உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.