25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா | 'குபேரா' படத்திற்கு அழுத்தம் கொடுத்த ஓடிடி நிறுவனம் | ராஜமவுலி, மகேஷ்பாபு பட வாய்ப்பைத் தவிர்த்த விக்ரம்? |
கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்ட போது 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது. பல மாநிலங்களிலும் அதுதான் அனுமதியாக இருந்தது. பின்னர்தான் முழுமையாக 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்தார்கள்.
ஆனால், 100 சதவீத அனுமதி வருவதற்கு முன்பே தமிழில் வெளிவந்த 'மாஸ்டர்' படம் பெரிய வசூலைக் குவித்தது. முதல் நாள் வசூலாக 35 கோடி வசூலித்தது.
தென்னிந்திய அளவில் அதுதான் கொரோனா தளர்வுகளுக்குப் பின் அதிகம் வசூலித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. தற்போது அந்த சாதனையை பவன் கல்யாண் நடித்து நேற்று தெலுங்கில் வெளிவந்த 'வக்கீல் சாப்' படம் முறியடித்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
'வக்கீல் சாப்' படத்தின் முதல் நாள் 40 கோடியைக் கடந்துள்ளதாக முதலில் வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் சிலர் 50 கோடி என்றும் சொல்லி வருகிறார்கள். ஆனாலும், 'வக்கீல் சாப்' படத்தின் வசூலை 'மாஸ்டர்' பட வசூலுடன் ஒப்பிடக்கூடாது என்பதுதான் உண்மை. 'மாஸ்டர்' படம் 50 சதவீத இருக்கை அனுமதியில் மட்டுமே வெளியான படம். 'வக்கீல் சாப்' படம் 100 சதவீத இருக்கைகளில் வெளிவந்த படம்.
'வக்கீல் சாப்' படம் 100 கோடி வசூலை எளிதில் கடந்துவிடும் என டோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அதற்கு மேலும் வசூலிக்குமா என்பது அடுத்த வாரம்தான் தெரியும்.