திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
நடிகர் சிவகார்த்திகேயன் சத்தமில்லாமல் பல விளையாட்டு வீரர்களுக்கும், படிக்க வசதி இல்லாத ஏழை மாணவர்களுக்கும் உதவி வருகிறார். திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவி தனலட்சுமி, தடகள விளையாட்டு வீராங்கனையாகவும் இருக்கிறார். சமீபத்தில் நடந்த தேசிய தடகள போட்டியில் கலந்து கொண்ட தனலட்சுமி 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டு புதிய சாதனை படைத்தார்.
11.39 விநாடிகளில் தூரத்தை கடந்த தங்கப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் இந்தியாவின் முன்னணி ஓட்டப்பந்தைய வீராங்கனை ஹிமா தாஸின் சாதனையை முறியடித்தார். இதனால் தற்போது அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அடிப்படையில் திருச்சிக்காரான சிவகார்த்திகேயன் தனலட்சுமியை தனது அலுவலத்திற்கு அழைத்து பாராட்டி, பரிசுகளை வழங்கினார். அதோடு விளையாட்டு தொடர்பாக தனக்கு எந்த உதவி வேண்டுமானாலும் கேட்கும்படி கூறியுள்ளார்.