பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் |

வாரணம் ஆயிரம், வெடி, வேட்டை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் சமீரா ரெட்டி. திருமணம் ஆன பின்பு நடிப்புக்கு முழுக்கு போட்டார். தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயாக உள்ள சமீரா, படங்களில் நடிக்கவில்லை என்றாலும் சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார். தனது குழந்தைகள் செய்யும் சேட்டைகள், அவர்களின் ஒவ்வொரு விஷயங்களை பதிவிட்டு வருகிறார். அதோடு அழகு சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கும் அவ்வப்போது டிப்ஸ் கொடுப்பவர், டிக்டாக் செய்து வீடியோவும் வெளியிடுவார். இந்நிலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார் சமீரா.
அவர் கூறுகையில், ‛‛நேற்று கொரோனா பரிசோதனை செய்தேன், பாசிட்டிவ் என வந்தது. இருப்பினும் நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டிலேயே என்னை நானே தனிமைப்படுத்தி கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். கடவுளின் அருளால் சாஸி, சாசுவுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். நேர்மறையான எண்ணங்களுடன் மனஉறுதியாக இருக்க வேண்டிய தருணம் இது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என தெரிவித்துள்ளார் சமீரா.