தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

துப்பாக்கி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜாம்வால்.. அந்த வருடத்திலேயே பில்லா-2 படத்திலும் அஜித்துக்கு வில்லனாக நடித்தார். பின் சூர்யாவுக்கு நண்பனாக அஞ்சான் படத்தில் நடித்தார். தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடித்த சக்தி என்கிற படத்தில் அறிமுகமான வித்யுத் ஜாம்வால், தனது திரையுலக பயணத்தில் பத்து வருடங்களை கடந்துவிட்டார்.
தற்போது திரையுலகில் தனது அடுத்த கட்ட நகர்வாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் வித்யுத் ஜாம்வால். ஆக்சன் ஹீரோ பிலிம் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ள இவர், தயாரிப்பாளரும் தனது நண்பருமான அப்பாஸ் சய்யத் என்பவருடன் இணைந்து படங்களை தயாரிக்க உள்ளார். இதுபற்றி வித்யுத் ஜாம்வால் கூறும்போது, “சினிமாவில் பத்து வருடங்கள் என்கிற மைல்கல்லை கடந்துவிட்டேன்.. இந்த தருணத்தில் தயாரிப்பு நிறுவனம் துவங்குவதை உங்களிடம் பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறேன்” என கூறியுள்ளார்.