இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் |
நடிகர் விவேக் சில தினங்களுக்கு முன்பு யாரும் எதிர்பாராத விதமாக மறைந்தார். அவரின் திடீர் மறைவு தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் அவரின் 1 கோடி மரக்கன்று நடும் பணியை இப்போதும் பலரும் முன்னெடுத்துள்ளனர். திரைப்பிரபலங்கள் உடன் பல்வேறு தன்னார்வலர்களும், பொதுமக்களும் அவர் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விவேக் மறைவை யொட்டி அவர் நினைவாக அவரது வயதான 59ஐ குறிக்கும் வகையில் திருவள்ளூர் ஆயுத படை மைதானத்தில் மாவட்ட எஸ்பி அரவிந்தன் தலைமையில் 59 மரக்கன்றுகள் நடும் பணி நடந்தது. இந்த நிகழ்வில் போலீசாருடன் இணைந்து நடிகை ரம்யா பாண்டியனும் மரக்கன்றுகளை நட்டார்.