பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கொரோனா காலத்தில் சில சினிமா நடிகைகள் அவர்களது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது சரியா என்பது குறித்து நேற்றுத்தான் ஒரு செய்தி வெளியிட்டோம். அது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கருத்து தெரிவித்த ஸ்ருதிஹாசன், நம்முடைய கொண்டாட்டங்கள் மற்றவர்களது உணர்வுகளை பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்,” என்றும் கூறியதாக ஒரு மேற்கோளும் இருந்தது.
இந்நிலையில் இன்று ஸ்ருதிஹாசன் சில எரோட்டிக் ஆன புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்டு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். மற்றவர்களாவது கிளாமரான புகைப்படங்களைப் பதிவிட்டு நிறுத்திக் கொண்டார்கள்.
ஆனால், ஸ்ருதிஹாசன் ஒரு படி மேலே போய் ஏடாகூடமான எக்ஸ்பிரஷன்களுடன் கூடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் என்ன மாதிரியான ஒரு இக்கட்டான சூழல் நிலவுகிறது, இப்போது எப்படியான புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்ற சிறிய பொறுப்புணர்வு கூட இல்லாமல் இப்படி புகைப்படங்களை வெளியிடுவதை நடிகைகள் தவிர்க்க மாட்டார்களோ என்ற சாமானிய ரசிகனின் குரல் அவர்கள் காதுகளில் விழுமா ?.