மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தற்போது அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக புஷ்பா என்ற படத்தில் நடித்து வருகிறார். அதோடு ஹிந்தியில் அமிதாப்பச்சனுடன் குட்பை, சித்தார்த் மல்ஹோத்ராவுடன் மிஷன் மஜ்னு ஆகிய படங்களிலும நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் புதிய படத்தின் கதை விவாதம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா என்பவரும் ஷங்கருடன் இணைந்து ஸ்கிரிப்ட் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
மேலும், இந்த படத்தில் நாயகியாக நடிப்பதற்கு தன்னை அணுகியதாக தெரிவித்துள்ள ராஷ்மிகா மந்தனா, ஷங்கரின் அழைப்பிற்காக தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.