ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திரையுலகினர் பலரும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர். பலரும் கொரோனா தடுப்பூசி எடுத்து வருகின்றனர். நடிகர் பார்த்திபன் சில வாரங்களுக்கு முன் கொரோனா இரண்டாம் கட்ட தடுப்பூசி எடுத்துக் கொண்டார். அதனால் அவருக்கு ஏற்பட்ட அலர்ஜியால் முகம் வீங்கியது. இதுப்பற்றி டுவிட்டரில் பதிவிட்டவர், பின் அந்த பதிவை நீக்கினார். தேவையில்லாமல் மக்கள் மத்தியில் பீதி ஏற்படுத்த வேண்டாம் என்று தனது பதிவை நீக்கினார்.
இந்நிலையில் டுவிட்டரில் பார்த்திபன் பதிவிட்டு இருப்பதாவது : என் அன்பு மகள் கீர்த்தனா இத்த'கவலை' பதிவுச் செய்யச் சொன்னார். எனவே இது நூறு சதவிகித உண்மை. ஒவ்வாமை (allergy) சில சமயங்களில் உணவு, ஒப்பனை, அதிக ஒளி இப்படி பல காரணங்களால் வந்ததுண்டு. பணவீக்கத்தை விட முகவீக்கம் குறைவாகவே ஏற்படும். இம்முறை கோவிட் தடுப்பூசி(2) எடுத்தபோதும் வந்தது. ஒரே நாளில் சரியாகியும் விட்டது. எனவே தடுப்பூசி அவசியமானது. ஆனால் ஜூரம், உடல் வலி போன்ற ஒரு சில விளைவுகள் வந்து போகலாம். என் உடல் நலன் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் நன்றி'' என பதிவிட்டுள்ளார்.