50 வருடம் ஒருவர் சூப்பர் ஸ்டாராவே இருக்கிறாரே அதுதான் பெரிய விஷயம் ; கூலி விழாவில் சத்யராஜ் புகழாரம் | கவர்ச்சியாக நடித்தவர் கடவுளாக நடிக்கலமா? : துர்க்கை ஆக நடித்த கஸ்துாரி பதில் | மலையாளம் பிக்பாஸ் 7ல் பங்கேற்ற ஹிந்தி பிக்பாஸ் 9 போட்டியாளர் | லோகேஷ் கனகராஜின் புரமோஷன் பேட்டிகள் ; ஜாலியாக கிண்டலடித்த ரஜினிகாந்த் | மகேஷ்பாபுவை அடுத்து மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறந்த ரவி தேஜா | தனி நபர்களை வைத்து படப்பிடிப்பு : தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை அறிக்கை | வாழ்த்து சொன்ன மோகன்லால் ; சந்திக்க நேரம் கேட்ட ஷாருக்கான் | பழம்பெரும் நடிகர் பிரேம் நசீர் மகன் ஷானவாஸ் காலமானார் | தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு |
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக உள்ளது. ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் பல மாநிலங்கள் அவதிப்படுவதுடன் இதனால் உயிரிழப்புகளும் அதிகம் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு இல்லை. மருத்துவமனைகள் பொய்யான தகவல்களை பரப்புகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியிருந்தார். இதை மேற்கோள் காட்டி தனது டுவிட்டரில், ‛‛ஒழுக்கமான மனிதரோ, புனிதரோ அல்லது தலைவரோ.... பொய் சொல்பவர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்கள் கன்னத்தில் அறை விழும் என பதிவிட்டுள்ளார் சித்தார்த். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.