தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

தமிழ் டிவிக்களில் முதல் முறையாக பலரது கவனத்தை ஈர்த்த, பல சர்ச்சைகளை உருவாக்கிய ரியாலிட்டி ஷோ என்று 'பிக் பாஸ்' நிகழ்ச்சியைச் சொல்லலாம். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் முடிவடைந்தாலும் முதல் சீசனில் கலந்து கொண்ட நடிகை ஓவியா தான் பலரின் மனங்களைக் கவர்ந்தார். அந்நிகழ்ச்சியில் சுற்றியிருந்தவர்களின் நெருக்கடியை ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் நிகழ்ச்சியை விட்டே பாதியில் வெளியேறினார். இருந்தாலும் இப்போதும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி என்றால் ஓவியாவின் ஞாபகம் டிவி நேயர்களுக்கு வந்துவிடும்.
ஓவியா இன்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். டுவிட்டரில் அதற்காக 'காமன் டிபி'யை வெளியிட்ட மூன்றாம் சீசனின் போட்டியாளரான சனம் ஷெட்டி, ஓவியாவை மிகவும் புகழ்ந்துள்ளார்.
“ரியாலிட்டி ஷோக்களின் முதல் ரியல் குயின். உலக அளவில் இதயங்களை வென்றவர், முதல் ஆர்மி பக்கங்களுக்குக் காரணமானவர். அவருடைய அப்பாவித்தனத்திற்காகவும், போராட்ட குணத்திற்காகவும் நினைவு கூற வேண்டியவர். ஒன் அன்ட் ஒன்லி ஓவியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,” எனப் பாராட்டியுள்ளார் சனம். அதற்கு ஓவியா உங்கள் அன்பான வாத்தைகளுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளார்.