அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

தெலுங்கில் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் படம் புஷ்பா. செம்மர கடத்தலின் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். முக்கிய வேடத்தில் பஹத் பாசில் நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்ததால் அவர் தற்சமயம் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஒய்வு எடுக்கிறார்.
ஆனாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.. காரணம் பஹத் பாசில் கொடுத்த தேதிகளை வீணாக்க விரும்பாத தயாரிப்பு நிறுவனம், அல்லு அர்ஜுனுடம் காம்பினேஷன் இல்லாத, அதேசமயம் பஹத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைந்து படமாக்கிவிட விரும்பியது..
ஆனால் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும்போது படபிடிப்பை அவசியம் நடத்தத்தான், வேண்டுமா என சோஷியல் மீடியாவில் சர்ச்சை எழுந்தது, இதனை தொடர்ந்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது புஷ்பா படக்குழு. இப்படம் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் ரிலீஸாக உள்ளது.