தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தெலுங்கில் அல்லு அர்ஜுன் தற்போது நடித்து வரும் படம் புஷ்பா. செம்மர கடத்தலின் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். முக்கிய வேடத்தில் பஹத் பாசில் நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தின் நாயகன் அல்லு அர்ஜுனுக்கு கொரோனா பாசிடிவ் என ரிசல்ட் வந்ததால் அவர் தற்சமயம் படப்பிடிப்பில் கலந்துகொள்ளாமல் வீட்டில் ஒய்வு எடுக்கிறார்.
ஆனாலும் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்தது.. காரணம் பஹத் பாசில் கொடுத்த தேதிகளை வீணாக்க விரும்பாத தயாரிப்பு நிறுவனம், அல்லு அர்ஜுனுடம் காம்பினேஷன் இல்லாத, அதேசமயம் பஹத் பாசில் சம்பந்தப்பட்ட காட்சிகளை விரைந்து படமாக்கிவிட விரும்பியது..
ஆனால் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக இருக்கும்போது படபிடிப்பை அவசியம் நடத்தத்தான், வேண்டுமா என சோஷியல் மீடியாவில் சர்ச்சை எழுந்தது, இதனை தொடர்ந்து படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது புஷ்பா படக்குழு. இப்படம் தென்னிந்திய மற்றும் ஹிந்தி மொழிகளில் ரிலீஸாக உள்ளது.