இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
தமிழில் கேடி என்ற படத்தில் அறிமுகமான இலியானா அதன்பிறகு விஜய்யுடன் நண்பன் படத்தில் நடித்தார். அதோடு, தெலுங்கு, ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்திருக்கும் இலியானா, ஆண்ட்ரூ என்ற வெளிநாட்டு காதலருடன் நெருக்கமாக பழகி வந்தார். இதனால் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவியாக வாழ்ந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.
ஒருகட்டத்தில் இலியானா கர்ப்பமாகி, கருவை கலைத்து விட்டதாகவும், அதையடுத்து காதலரை பிரிந்த விரக்தியில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாகவும் பலதரப்பட்ட செய்திகள் மீடியாக்களில் பற்றி எரிந்தன.இந்நிலையில் இதுபோன்ற செய்திகளுக்கு சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கமளித்துள்ளார் இலியானா.அதில், நான் கர்ப்பமாக இருந்தேன், கருக்கலைத் தேன் என்று வெளியான செய்திகள் வெளியானதை அறியும்போது வருத்தமாக இருக்கிறது. அதோடு, நான் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான செய்தி எனக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது.
நான் எதற்காக தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். அதற்கான அவசியமே இல்லை. இதுபோன்ற செய்திகளை யார் எதற்காக பரப்பி விடுகிறார்கள் என்றே தெரியவில்லை என்று கூறியுள்ள இலியானா, என்னைப்பற்றி வெளியான இதுபோன்ற செய்திகள் அனைத்தும் அப்பட்டமான வதந்தியே. இதில் துளிகூட உண்மை கிடையாது என்று அந்த பேட்டியில் விளக்கமளித்துள்ளார் இலியானா.