தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

தெலுங்குத் திரையுலகத்தில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பிஸியாக இருப்பவர் அடிவி சேஷ். கர்மா, கிஸ் ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். க்ஷனம், கூடாச்சாரி, ஆகிய படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். தற்போது மேஜர் என்ற படத்திற்கு கதை எழுதி நாயகனாக நடித்து வருகிறார்.
ஆந்திரா, தெலங்கானாவில் தற்போது கொரோனா பாதிப்புகளுக்கு அங்குள்ள தெலுங்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த சிறு சிறு உதவிகளைச் செய்து வருகிறார்கள். அந்த விதத்தில் கிங் கோட்டி மாவட்ட மருத்துவமனை பணியாளர்களுக்கும், நோயாளிகளுக்கும் குடிப்பதற்கு தண்ணீர் வசதி இல்லை என்ற செய்தி வெளிவந்தது.
அதைப் பற்றிப் படித்த அடிவி சேஷ் உடனடியாக 850 லிட்டர் தண்ணீர் பாட்டில்களை அந்த மருத்துவமனைக்கு தனது செலவில் அனுப்பி வைத்துள்ளார். மேலும், எவ்வளவு தேவையோ அதையும் செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். அந்த மருத்துவமனையில் சுமார் 300 கொரானோ நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்களாம்.
தமிழ்த் திரையுலகில் இன்னும் எந்த ஒரு பிரபலமும் தங்களால் இயன்ற உதவிகளை இந்த இரண்டாவது கொரானோ அலையில் ஆரம்பித்து வைக்கவில்லை.