தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கமலை வைத்து இந்தியன்-2 படத்தை ஆரம்பித்த இயக்குனர் ஷங்கர், தற்போது அந்தப்படத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஷங்கர் படங்களில் வில்லன் கதாபாத்திரம் எப்போதுமே பவர்புல்லாக இருக்கும். அந்தவகையில் ராம்சரண் படத்தில் கன்னட ஹீரோ சுதீப்பை வில்லனாக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே ஐ படத்தில் சுரேஷ்கோபி, 2.O படத்தில் அக்சய் குமார் என மற்ற மொழிகளில் ஹீரோக்களாக நடித்து வருபவர்களை அழைத்து வந்து வில்லனாக்கும் ஒரு சென்டிமென்ட்டை தொடர்ந்து வருகிறார் ஷங்கர். தவிர ஷங்கர் படத்தில் நடிக்க அனைத்து நடிகர்களுமே ஆர்வம் காட்டவே செய்வார்கள். அந்தவகையில் சுதீப்பும் ஷங்கர் சென்டிமென்ட்டில் சிக்குவார் என்றே தெரிகிறது.