ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் | 24 மணி நேரத்தில் 'ஜெயிலர்' சாதனையை முறியடித்த 'கூலி' டிரைலர் | 'கூலி' : அமெரிக்க பிரிமீயர் முன்பதிவில் 1 மில்லியன் வசூல் | தெலுங்குத் திரையுலகத்தில் இன்று முதல் ஸ்டிரைக் | 'ஏஐ' மூலம் மாற்றப்பட்ட கிளைமாக்ஸ்: தனுஷ் எதிர்ப்பு | ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! |
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருகிறவர் பாலசரவணன். குட்டிப்புலி படத்தில் அறிமுகமான இவர், அதன்பிறகு பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், டார்லிங், வேதாளம், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், கொடிவீரன், உள்குத்து, ஈஸ்வரன், களத்தில் சந்திப்போம் உள்பட 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
மதுரையில் வசித்து வந்த இவரின் தங்கையின் கணவர் இருதினங்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து பாலசரவணன் டுவிட்டரில், ‛‛அன்பு நண்பர்களே. எனது தங்கையின் கணவர் கரோனா காரணமாக இறந்துவிட்டார். 32 வயது. தயவு கூர்ந்து மிகக் கவனமாக இருக்கவும். நமக்கெல்லாம் வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம். நம்மைப் பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும். தயவு செய்து முக கவசம் அணியுங்கள்'' என தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார்.