இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், சமூக ஆர்வலர்கள் அவர்களால் முடிந்த சில உதவிகளை மக்களுக்காக செய்து வருகிறார்கள். நேற்று புதிதாக பதவியேற்ற ஸ்டாலின் தலைமையிலான அரசும் கொரோனா தடுப்புக்கான விஷயங்களை உடனடியாக முன்னெடுத்துள்ளது. மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ரெம்டெசிவர் மருந்து சென்னையைத் தவிர பிற முக்கிய மாநகரங்களிலும் கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.
ஸ்டாலினின் கொரோனா தடுப்பு பற்றிய சில அறிவிப்புகளுக்கு அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடல், அம்மா உணவகம் திறப்பு ஆகியவற்றை வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தற்போது பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு அரசுக்கு ஆதரவாக டுவீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “கோவிட்டை எதிர்ப்பதில் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கும் தமிழக மக்கள் உதவியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். ஒரு அரசால் மட்டும் இதைச் செய்ய முடியாது என்பதை ஞாபகப்படுத்துகிறேன். நாமும் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும், நம்மால் முடிந்த சிறு உதவியைச் செய்வோம், சிறு துளி பெரு வெள்ளம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.