தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
கன்னடத்தில் முன்னணி ஹீரோவாக நிலையான இடத்தை பிடித்து விட்டாலும், மற்ற மொழி படங்களில் இருந்து வரும் முக்கிய வேடங்களையும் நடிகர் கிச்சா சுதீப் மறுப்பதில்லை. இதற்குமுன் பாகுபலி, சயீரா நரசிம்ம ரெட்டி ஆகிய படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்த சுதீப், அடுத்ததாக பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ஆதிபுருஷ் படத்தில் விபீஷணனாக நடிக்க இருக்கிறார் என்கிற செய்தி சமீபத்தில் வெளியானது.
அதிகாரபூர்வமாக இந்த செய்தி உறுதி செய்யப்படாத நிலையில், இந்தப்படத்தில் நடிப்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மழுப்பலாக பதிலளித்துள்ளார் கிச்சா சுதீப். இதுபற்றி அவர் கூறும்போது, “ஆதிபுருஷ் படக்குழுவினர் எனது மேனேஜரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்கள். ஆனால் நான் இன்னும் அவர்களை சந்தித்து பேசவில்லை. பேச்சுவார்த்தை போய்க்கொண்டு இருக்கிறது. அதனால் இதில் நடிக்கிறேனா என்பது பற்றி இப்போது என்னால் சொல்ல முடியாது” என கூறியுள்ளார்