படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

'பாகுபலி' படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு தென்னிந்திய அளவில் பெரிய பட்ஜெட் படங்கள் சில உருவாகி வருகின்றன. பிரபாஸ் நடிக்கும் 'ராதே ஷ்யாம்', ராஜமவுலி இயக்கும் 'ஆர்ஆர்ஆர்', அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா, மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்', ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2', மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும் 'மரைக்கார்', தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'ஆச்சார்யா' ஆகிய படங்கள் அவற்றில் சில முக்கியமான படங்கள்.
இவற்றில் சில படங்கள் கடந்த வருடமே வந்திருக்க வேண்டியவை. ஆனால், கொரோனாதொற்று காரணமாக அவற்றின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடத்தி முடிக்க முடியாததால் அவை இந்த வருடத்திற்குத் தள்ளிப் போயின. இருந்தாலும், இந்த வருடமும் அந்தப் படங்கள் வெளிவருமா என்பது சந்தேகமாகத்தான் உள்ளது.
மேலே, குறிப்பிட்ட படங்களில் 'மரைக்கார்' படம் மட்டுமே வெளியீட்டிற்குத் தயாராக உள்ளது. மற்ற படங்களின் படப்பிடிப்புகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. அந்தப் படம் சம்பந்தப்பட்ட சில ஹீரோக்கள் கொரானோ தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நலமுடன் திரும்பி வந்தாலும் உடனடியாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை.
அந்தப் படங்கள் அனைத்துமே பல கோடி ரூபாய் செலவில் தயாராகி வரும் படங்கள். வெளியீட்டில் தாமதம் ஆக ஆக அந்தப் படங்களின் செலவினமும் அதிகமாகி வரும். அதனால், படத் தயாரிப்பாளர்கள் பெரும் சிக்கலை சந்திக்கவும் வாய்ப்புள்ளது.
படம் தயாராகி வெளிவரும் சமயத்தில் வேறு எந்த பிரச்சினையும் இருக்கக் கூடாது. மக்கள் அனைவரும் தியேட்டர்களுக்குத் திரும்பி வந்தால்தான் அவர்கள் செலவழித்த பல கோடி முதலீட்டைத் திரும்பப் பெற முடியும்.