அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் |

சென்னை : நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். இந்த தகவலை அவரது மகள் சவுந்தர்யா டுவிட்டரில் போட்டோ உடன் பகிர்ந்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை இந்தியாவில் அதிதீவிரமாகி உள்ளது. நோயை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டிருந்தாலும் கொரோனாவுக்கான தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாகி உள்ளது. பொதுமக்கள் உடன் திரைப்பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசியை ஆர்வமாய் எடுத்து வருகின்றனர். ஏற்கனவே 60 வயதை கடந்த கமல், சரத்குமார் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர். தற்போது இளம் நடிகர்களும் தடுப்பூசி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்த நடிகர் ரஜினிகாந்த் நேற்று தான் ஐதராபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்பினார். இன்று(மே 12) தனது இல்லத்தில் கொரோனாவுக்கான தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். இது அவரின் இரண்டாவது கட்ட தடுப்பூசி என தெரிகிறது.
இதுப்பற்றி அவரது மகள் சவுந்தர்யா டுவிட்டரில், ‛‛நம்ம தலைவர் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டார். கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் நாம் வெல்வோம். அனைவரும் மாஸ்க் அணியுங்கள், பாதுகாப்பாக வீட்டிலேயே இருங்கள்'' என பதிவிட்டுள்ளார்.