100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கனிமா' | ஸ்ரீதேவியை பார்த்து இன்ப அதிர்ச்சியான சுதீப் ; உஷார் படுத்திய விஜய் | அடூர் கோபாலகிருஷ்ணன் மன்னிப்பு கேட்க வேண்டும் ; பின்னணி பாடகர் சங்கம் கோரிக்கை | வேட்பு மனுவை நிராகரித்த தயாரிப்பாளர் சங்கம் ; நீதிமன்றத்தை நாடும் பெண் தயாரிப்பாளர் | இந்த ஆட்களை எல்லாம் நிச்சயமாக எல்சியுவில் சேர்க்க மாட்டேன் ; லோகேஷ் கனகராஜ் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: திறமையான திரைக்கதை, திகைக்க வைக்கும் நடிப்பால் வென்று காட்டிய “தெய்வமகன்” | திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா |
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, நேற்று தனது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
ஆனால், இயக்குனர் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ள போட்டோக்களில் அவருடைய கையில் போடும் தடுப்பூசி மட்டும் தெரிகிறது. நயன்தாராவுக்கு போடும் தடுப்பூசி தெரியவில்லை. வெறும் விரல்களால் ஊசி போடுவது போல 'போஸ்' கொடுத்து புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சர்ச்சை எழுந்துள்ளது.
நயன்தாராவின் புகைப்படங்களைக் பகிர்ந்த பலரும் ஊசி எங்கே இருக்கிறது தெரியவில்லை, என்றே கமெண்ட்டுகளைப் பதிவிட்டு வருகிறார்கள். ஒரு முன்னணி நடிகையான நயன்தாரா உண்மையிலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டாரா அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்டது போல் போட்டோ எடுத்துக் கொண்டாரா என பலரும் கேட்டு வருகிறார்கள்.
அதற்கு நயன்தாரா சரியான விளக்கம் கொடுப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.