தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கொரோனா தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். சில குடும்பங்களில் குடும்பத்தில் இருக்கும் அனைவருக்குமே கொரோனா தொற்று பரவி வீடுகளில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களால் வீடுகளில் சமைக்கவும் முடியாது. ஹோட்டல்களில் இருந்து வாங்கியும் சாப்பிட முடியாது.
இப்படி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளவர்களுக்காக பலர் நியாய விலையில் உணவுகளை வழங்கி வருகின்றனர். அதே சமயம் சில பிரபலங்கள் சேவை மனப்பான்மையில் அவர்கள் பகுதியில் உள்ளவர்களுக்கு உணவுகளை இலவசமாகவே வழங்கி வருகிறார்கள்.
டிவி நடிகை சரண்யா, அவருடைய வீட்டில் சமையல் செய்து அவரே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் உணவுகளைக் கொடுத்து வருகிறார். இது குறித்து இன்ஸ்டாகிராமில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையில் 2 ஆவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறேன். லாக் டவுன் என்பதால் தினமும் காலையில் நானே வண்டியை எடுத்து கொண்டு உணவு பொட்டலங்களோடு கிளம்புகிறேன். இரட்டை மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணையென்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டத்தில் நிகழும் மரணச் செய்தி கலக்கத்தை கொடுக்கிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
சில நல்ல உள்ளங்கள் இப்படி சில சேவைகளை மக்களுக்கு வழங்கி வருவதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.