தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கொரோனா இரண்டாவது அலையில் பிரபல நடிகர்களும், சின்ன இணை, துணை நடிகர்களும் உயிரிழந்துள்ளனர். இதனால் திரையுலகினர் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், ‛‛மே மாதம் 31-ந்தேதி வரை சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகளை நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளார். மேலும், வருகிற 31ந்தேதி அன்று ஒரு மீட்டிங் நடத்தி தொடர்ந்து படப்பிடிப்புகள் நடத்துவதா? இல்லை தள்ளி வைப்பதா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அறிவித்துள்ள ஆர்.கே.செல்வமணி, இனிமேல் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் யாராக இருந்தாலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். போடாதவர்கள் அதற்கான உரிய காரணத்தை பெப்சிக்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.