திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கன்னடத்தில் கேஜிஎப் என்கிற படத்தை இயக்கி, அதை இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டு, வெற்றிபெறச் செய்து அதன்மூலம் பிரபல இயக்குனராக மாறியவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக கேஜிஎப்-2 படத்தை இயக்கிய முடித்துவிட்டு, தற்போது பிரபாஸ் நடிப்பில் சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார்
இந்த நிலையில் இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிகை ஜோதிகா நடிக்கிறார் என்ற தகவல் தற்போது கசிந்துள்ளது. இவர் பிரபாஸுக்கு அக்காவாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ஜோதிகா தனது இரண்டாவது இன்னிங்ஸிலும், நாயகியாக நடித்து வந்தாலும், தம்பி படத்தில் கார்த்திக்கு அக்காவாக நடித்ததில் இருந்து, இனி இந்த விதமான கதாபாத்திரங்களிலும் அவர் நடிப்பார் என்று தெரிகிறது.