ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
கொரோனா ஊரடங்கு அனைவரையும் வீட்டுக்குள் முடக்கி வைத்திருக்கிறது. பிஸியாக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் பலருக்கும் வீட்டுக்குள்ளேயே இருந்து வேலை பார்ப்பது கொஞ்சம் கடினமான விஷயம் தான்.
வெளியில் சென்று வாக்கிங் போகக் கூட பலர் தயங்கி வருகிறார்கள். வீட்டின் மாடியில் சென்று வாக்கிங் போவதைத்தான் இந்த ஊரடங்கு காலத்தில் பலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டை விட்டு வெளியில் வருவதில்லை.
நடிகை காஜல் அகர்வால் மும்பையில் உள்ள அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இன்று காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்பே எழுந்து தனது பால்கனியில் நின்று கொண்டு சூரிய உதயத்தை ரசித்து “வெள்ளிக்கீற்றைத் தேடுகிறேன், சூரிய உதயம் எனது பாக்கெட்டில், நன்றி,” எனப் பதிவிட்டுள்ளார். மேக்கப் இல்லாமல் காலை நேரத்திலும் அழகாகத்தான் இருக்கிறார் காஜல்.