பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
அயன், மாற்றான், காப்பான், அனேகன், கவண் என மகத்தான படங்களை உருவாக்கிய கே.வி.ஆனந்த், கொரோனா பெருந் தொற்றால் இந்த உலகை விட்டு பிரிந்தார். தற்போது அவரது உதவியாளர்கள் பலரும் தனியாக படம் இயக்குகிறார்கள். சிலர் வேறு சில இயக்குனர்களோடு பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் இணைந்து கே.வி.ஆனந்தின் நினைவை போற்றும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான மாற்றான் படத்தில் இடம்பெற்ற "யாரோ யாரோ நான் யாரோ" என்ற பாடலை பின்னணி இசையாக பயன்படுத்தி இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர். கே.வி.ஆனந்த் படப்பிடிப்பில் பணிபுரியும் காட்சிகள் , உதவி இயக்குனர்களுடன் மகிழ்ச்சியாக இருக்கும் தருணங்கள், கலைஞர்களுக்கு நடிப்பு சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இறுதியில் "நீங்கள் கற்று கொடுத்த தைரியமும், நீங்கள் கற்றுக் கொடுத்த சினிமாவும் என்றும் எங்களை முன்னோக்கியே வழிநடத்தும் குட்பை மாஸ்டர்" என்று முடித்திருக்கிறார்கள். இது காண்போரை கண்கலங்க வைப்பதாக இருக்கிறது.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும். https://www.youtube.com/watch?v=BPv5PwodMkU&t=15s