ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
இந்தியில் அமிதாப் பச்சனை வைத்து 'பா', 'சீனிகம்' என வித்தியாசமான படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர் இயக்குனர் பால்கி. அதன்பிறகு அமிதாப் பச்சனையும் தனுஷையும் இணைத்து இந்தியில் 'ஷமிதாப்' என்கிற படத்தை இயக்கினார் பால்கி. மேலும் அக்சய் குமாரை வைத்து 'பேடு மேன்' என்கிற படத்தை இயக்கிய பால்கி, கடைசியாக மிஷன் மங்கள் படத்திற்கு கதையும் எழுதியிருந்தார். இந்தநிலையில் அவர் அடுத்தததாக துல்கர் சல்மான் நடிக்கும் படத்தை இந்தியில் இயக்குகிறார் என சொல்லப்பட்டது.
தற்போது தானும் பால்கியும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இந்தப்படம் குறித்த தகவலை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளார். ஆம். இந்தப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம்..தான் ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார்.. இதுவரை பால்கி இயக்கிய படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டு, இருக்கை நுனியில் அமரவைக்கும் சைக்காலஜிக்கல் த்ரில்லர் படமாக இது உருவாக இருக்கிறதாம். ஏற்கனவே கார்வான், தி சோயா பேக்டர் என இரண்டு இந்திப்படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மானுக்கு இந்தியில் இது மூன்றாவது படமாகும்.