ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சமீபத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு கேரள கவிஞர் ஓ.என்.வி., விருது அறிவிக்கப்பட்டது. மீ டூ புகாரில் குற்றம் சாட்டப்பட்ட வைரமுத்துவிற்கு இந்த விருது வழங்க சின்மயி, பார்வதி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த விருது குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என ஓஎன்வி விருது குழு அறிவித்தது. மேலும் தனக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட விருதை சர்ச்சை காரணமாக திருப்பி தருவதாக வைரமுத்து தெரிவித்தார்.
இதுஒருபுறம் இருக்க நெட்டிசன் ஒருவர் சின்மயிடம், ‛‛வைரமுத்துவை ஏன் உங்கள் திருமணத்திற்கு அழைத்தீர்கள், ஏன் அவரது காலில் விழுந்தீர்கள்'' என கேட்டு போட்டோவை வெளியிட்டார். இதற்கு பதிலளித்த சின்மயி, ‛‛அவரை கூப்பிட சொல்லி டார்ச்சர் பண்ணதே அவர் மகன் தான்'' என பதிலளித்தார். இவரின் பதிலை மேற்கோள் காட்டி மதன் கார்கியிடம் இதுப்பற்றி கேள்வி எழுப்பினார்.
அதற்கு மதன் கார்கி டுவிட்டரில், ‛‛இது மற்றுமொரு பொய். அவர் தான் என் தந்தையை தனது திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என விரும்பினார். ஆனால் என் தந்தை அவர் மீது அதிருப்தியில் இருந்ததால் பார்க்க மறுத்துவிட்டார். அதன் பிறகு என்னிடம் சொல்லி அவரை பார்க்க அனுமதி பெற்று தர சொன்னார். நானும் செய்தேன். அதன்பின் என் தந்தையிடம் ஆசீர்வாதம் பெற்றார். மேலும் சிலர் உங்களது தாய், தந்தையை வெறுத்து அவர்கள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது நீங்கள் யாரை நம்புவீர்கள்? என்று ஒரு கேள்வி எழுப்பி நான் எனது தந்தையை நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ள மதன்கார்க்கி, தங்கள் பக்கம் உண்மை இருப்பதுபோல் குற்றம் சாட்டுபவர்கள் நம்பினால் அதை அவர்கள் சட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் செல்லட்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.