தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
அவன் இவன், பாகன், தெகிடி, அதே கண்கள், விதி மதி உல்டா, தர்மபிரபு உள்பட பல படங்களில் நடித்துள்ளவர் ஜனனி ஐயர். தற்போது தொட்டாசினிங்கி, வேஷம், கசட தபற, பகீரா, யாக்கை திரி உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.
இதுநாள்வரை ஜனனி ஐயர் என தனது பெயரை குறிப்பிட்டு வந்தவர் திடீரென இப்போது சமூகவலைதளங்களில், தனது பெயரை ஜனனி என்று மாற்றி இருக்கிறார். அதோடு "மாற்றம் ஒன்றே மாறாதது. அனைவரும் ஒற்றுமையாக இருப்போம்" என்று பதிவிட்டு ஜனனி என குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.