நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் | ஆகஸ்ட் 22-ல் ஓடிடியில் வெளியாகும் தலைவன் தலைவி | லிவ்-இன் உறவுகள் பெண்களுக்கு தீங்கு விளைவிக்கும் : கங்கனா | அப்படி நடித்ததால் ரசிகர்கள் வெறுத்தனர் : அனுபமா பரமேஸ்வரன் | சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? |
கொரோன 2வது அலை தொற்று காலத்தில் முதல் அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் வழங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதுதவிர பெப்சி தொழிலாளர்களுக்கும், நாடக கலைஞர்களுக்கும் நிதி வழங்கினார்.
தற்போது தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் இப்போது கொரோனா 2வது அலையில் இருக்கிறோம். முதல் அலையை விட, இரண்டாவது அலையில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முக்கியமாக ஆஸ்துமா, இதயப் பிரச்சினை இருப்பவர்களை ரொம்பவே பாதித்துள்ளது.
தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியே வராதீர்கள். முக்கியமான விஷயத்துக்காக வெளியே சென்றால் கூட இரட்டை முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமன்றி, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கிருமிநாசினி பயன்படுத்துங்கள்.
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். கொரோனாவை வெல்வோம், மக்களைக் காப்போம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
![]() |
இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார்.