ஹீரோவாக மாறும் காமெடியன் ரவி மரியா: ஹீரோயின் தேடும் பணி தீவிரம் | ஜனநாயகன் முதல் காட்சி டிக்கெட் விலை எவ்வளவு : இதுதான் கோலிவுட்டில் ஹாட் டாக் | மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை |

கொரோன 2வது அலை தொற்று காலத்தில் முதல் அமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் வழங்கினார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இதுதவிர பெப்சி தொழிலாளர்களுக்கும், நாடக கலைஞர்களுக்கும் நிதி வழங்கினார்.
தற்போது தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளின் ஒரு பகுதியாக விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நாம் இப்போது கொரோனா 2வது அலையில் இருக்கிறோம். முதல் அலையை விட, இரண்டாவது அலையில் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். முக்கியமாக ஆஸ்துமா, இதயப் பிரச்சினை இருப்பவர்களை ரொம்பவே பாதித்துள்ளது.
தயவுசெய்து வீட்டிலிருந்து வெளியே வராதீர்கள். முக்கியமான விஷயத்துக்காக வெளியே சென்றால் கூட இரட்டை முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமன்றி, கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கிருமிநாசினி பயன்படுத்துங்கள்.
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், வயதானவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கொரோனா இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். கொரோனாவை வெல்வோம், மக்களைக் காப்போம். நம்மையும் காப்போம், நாட்டையும் காப்போம்.
இவ்வாறு அவர் பேசி உள்ளார்.
![]() |
இதனிடையே நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது முதற்கட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்டார்.