மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஒரு மாத காலமாக படப்பிடிப்புகள் நடத்தப்படாமல் முடங்கிப் போயுள்ளன. பெரும்பாலான தமிழ்த் திரைப்படப் படப்பிடிப்புகளும் ஐதராபாத்தில் தான் நடைபெற்று வருகின்றன.
கடந்த மாதம் அங்கு ஊரடங்கு விதிக்கப்பட்ட போதும் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படத்திற்காக சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை நடத்தியதாகச் சொன்னார்கள். மே 10ம் தேதிக்குப் பிறகே ரஜினிகாந்த் அங்கிருந்து சென்னை திரும்பினார்.
இதனிடையே, தெலங்கானாவில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குக்கான தளர்வுகளை ஜுன் 10ம் தேதிக்குப் பிறகு படிப்படியாக அறிவிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதனால், தெலுங்குத் திரையுலகினர் இந்த மாதக் கடைசியில் இருந்து விடுபட்ட தங்களது படங்களின் படப்பிடிப்புகளை நடத்த ஆயத்தமாகி வருகிறார்களாம்.
ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி அளிக்கப்பட்டால் தமிழ் சினிமாவிலிருந்தும் பலர் அங்கு சென்று படப்பிடிப்பை ஆரம்பிக்கவும் வாய்ப்புள்ளது.




