சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! | மகன் இயக்கியுள்ள படம் குறித்து ஷாருக்கானின் நேர்மையான விமர்சனம் | நடிகர் சங்கத்தில் மீண்டும் சேருவேனா ? நடிகை பாவனா பதில் | டாம் குரூஸ் படத்தில் நடிக்க மறுத்தது ஏன் ? பஹத் பாசில் விளக்கம் | ரஜினியின் ‛கூலி' படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவை ஆலியா பட்டுக்கு போட்டியாக சித்தரிக்கும் பாலிவுட் ஊடகங்கள்! | பலாத்காரம் செய்யப்பட்டாலும் பெண்களைத்தான் குறை சொல்கிறார்கள்! -கங்கனா ரணாவத் ஆவேசம் | தனுஷின் ‛இட்லி கடை'யில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள ஷாலினி பாண்டே! | 58 வயதிலும் தீவிர ஒர்க்அவுட்டில் ஈடுபடும் நதியா! |
தென்னிந்திய மாநிலங்களில் உள்ள திரையுலகம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்றன. தமிழ், தெலுங்குப் படங்கள் பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்களில் வெளியாகி வருவது வழக்கமாகிவிட்டது.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ஜுலை 1 முதல் தியேட்டர்களைத் திறக்க வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலங்கானா மாநிலத்தில் 100 சதவீத அனுமதியும், ஆந்திராவில் 50 சதவீத அனுமதியும் வழங்கப்படலாம் என்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகத்தை விட தெலுங்குத் திரையுலகத்தில்தான் பல பிரம்மாண்டமான படங்களை எடுத்து வருகிறார்கள். அவற்றை வெளியிட முடியாமல் கடந்த சில வாரங்களாகவே தத்தளித்து வருகிறார்கள். 50 சதவீத இருக்கை என்றால் கூட தங்களது படங்களை வெளியிட்டு வந்தவரை லாபம் பார்த்துவிட வேண்டும் என அங்குள்ள தயாரிப்பாளர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இருந்தாலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்தால்தான் பிரம்மாண்ட படங்களை வெளியிட்டு ஓரளவிற்காவது வசூல் பார்க்க முடியும். இந்த மாநிலங்களில் எப்போது தியேட்டர்களைத் திறப்பார்கள் என்பது சீக்கிரமே தெரிய வரலாம்.