நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
தென்னிந்திய மாநிலங்களில் உள்ள திரையுலகம் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாகவே கடந்த சில வருடங்களாக இருந்து வருகின்றன. தமிழ், தெலுங்குப் படங்கள் பெரும்பாலும் தென்னிந்திய மாநிலங்களில் வெளியாகி வருவது வழக்கமாகிவிட்டது.
கடந்த ஒரு மாத காலத்திற்கும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் தெலங்கானா, ஆந்திரா மாநிலங்களில் ஜுலை 1 முதல் தியேட்டர்களைத் திறக்க வாய்ப்புள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தெலங்கானா மாநிலத்தில் 100 சதவீத அனுமதியும், ஆந்திராவில் 50 சதவீத அனுமதியும் வழங்கப்படலாம் என்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகத்தை விட தெலுங்குத் திரையுலகத்தில்தான் பல பிரம்மாண்டமான படங்களை எடுத்து வருகிறார்கள். அவற்றை வெளியிட முடியாமல் கடந்த சில வாரங்களாகவே தத்தளித்து வருகிறார்கள். 50 சதவீத இருக்கை என்றால் கூட தங்களது படங்களை வெளியிட்டு வந்தவரை லாபம் பார்த்துவிட வேண்டும் என அங்குள்ள தயாரிப்பாளர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இருந்தாலும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலும் தியேட்டர்களைத் திறந்தால்தான் பிரம்மாண்ட படங்களை வெளியிட்டு ஓரளவிற்காவது வசூல் பார்க்க முடியும். இந்த மாநிலங்களில் எப்போது தியேட்டர்களைத் திறப்பார்கள் என்பது சீக்கிரமே தெரிய வரலாம்.