திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! | ‛சூர்யா 45' படத்தின் தலைப்பு இதுவா? |
கொரோனா தொற்று இரண்டாவது அலை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகிறது. இருந்தாலும் சில பிரபலங்களின் மறைவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எதிர்பாராத சில மரணங்களால் பலரும் துயரம் அடைகிறார்கள்.
தனது தத்ரூபமான ஓவியங்களால் பலரது பாராட்டையும் பெற்றவர் பிரபல ஓவியர் இளையராஜா. கிராமத்து சூழலில் அவர் வரைந்த ஓவியங்களைக் கண்டு வியக்காதவர்கள ஒரு சிலரே. அவர் கொரானோ தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இளையராஜா மறைவுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார். “பேரன்பு மிக்க அண்ணன் ஓவியர் இளையராஜா அவர்களின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்பையும், அடக்க முடியாத துயரத்தையும் தருகிறது. இந்த நோயின் கொடூரத்தை வெல்ல முடியாத சூழலை கண்டு பெரும் மன உளைச்சல் அடைகிறேன். ஆழ்ந்த இரங்கல்,” எனப் பதிவிட்டுள்ளார்.
சென்னை ஓவியக் கல்லூரியில் பட்டம் பெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.