சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கொரோனா தொற்று இரண்டாவது அலை தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக தணிந்து வருகிறது. இருந்தாலும் சில பிரபலங்களின் மறைவு பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எதிர்பாராத சில மரணங்களால் பலரும் துயரம் அடைகிறார்கள்.
தனது தத்ரூபமான ஓவியங்களால் பலரது பாராட்டையும் பெற்றவர் பிரபல ஓவியர் இளையராஜா. கிராமத்து சூழலில் அவர் வரைந்த ஓவியங்களைக் கண்டு வியக்காதவர்கள ஒரு சிலரே. அவர் கொரானோ தொற்று காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் நேற்று நள்ளிரவில் மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இளையராஜா மறைவுக்கு இயக்குனர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார். “பேரன்பு மிக்க அண்ணன் ஓவியர் இளையராஜா அவர்களின் மரணம் ஏற்றுக் கொள்ள முடியாத தவிப்பையும், அடக்க முடியாத துயரத்தையும் தருகிறது. இந்த நோயின் கொடூரத்தை வெல்ல முடியாத சூழலை கண்டு பெரும் மன உளைச்சல் அடைகிறேன். ஆழ்ந்த இரங்கல்,” எனப் பதிவிட்டுள்ளார்.
சென்னை ஓவியக் கல்லூரியில் பட்டம் பெற்றவர் இயக்குனர் பா.ரஞ்சித் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.