சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிரபாஸ், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடித்து வரும் படம் 'ராதே ஷ்யாம்'. இப்படத்தை தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள்.
சுமார் 300 கோடி ரூபாய் செலவில் இப்படம் எடுக்கப்பட்டு வருவதாகச் சொல்கிறார்கள். இன்னும் சில காட்சிகளை படமாக்கிவிட்டால் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும். அதற்கு முன்னதாக மற்ற பணிகளை தற்போது செய்து வருகிறார்களாம்.
இதனிடையே, இப்படத்தின் அனைத்து விதமான உரிமைகளையும் சுமார் 400 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள அமேசான் நிறுவனம் பேச்சு வார்த்தை நடத்துவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அனைத்து மொழிகளுக்குமான ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை என படத்தின் ஒட்டுமொத்த உரிமையும் அந்த 400 கோடியில் அடங்கும் என்கிறார்கள்.
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வரும் படத்தை எப்படி ஓடிடி தளத்தில் வெளியிடுவது என தயாரிப்பு நிறுவனமும் யோசித்து வருகிறதாம். எனவே, வரும் தசரா விடுமுறையில் தியேட்டர்களில் படத்தை வெளியிடவும் தயாரிப்பாளர் தயாராகி வருவதாக மற்றொரு தகவல் தெரிவிக்கிறது.
ஜுலை மாதம் தெலுங்கு மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்கிறார்கள். அப்போது மக்கள் எப்படி வருகிறார்கள் என்பதைப் பொறுத்து 'ராதேஷ்யாம்' படத்தின் வெளியீட்டை முடிவு செய்யலாம் என்றும் தெரிகிறது.