ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு |
தமிழில் ரோஜாக்கூட்டம், பத்ரி உள்பட பல படங்களில் நடித்தவர் பூமிகா. சமந்தா நடித்த யுடர்ன் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஹிந்தி பிக்பாஸ்-15 நிகழ்ச்சியில் பூமிகா பங்கேற்பதாக வெளியான ஒரு செய்திக்கு அவர் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து பூமிகா வெளியிட்டுள்ள செய்தியில், ஹிந்தி பிக்பாஸ் -15 நிகழ்ச்சியில் நான் பங்கேற்க போவதாக வெளியான செய்தி உண்மையல்ல என்று தெரிவித்துள்ளார். அந்தநிகழ்ச்சியில் நட்சத்திர போட்டியாளராக கலந்து கொள்ள என்னை அழைத்தனர். ஆனால் எனக்கு ஆர்வம் இல்லாததால் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தவிர்த்து விட்டேன்.
அதோடு இதற்கு முன்பு ஹிந்தி பிக்பாஸ் 1,2,3 சீசன்களில் கலந்து கொள்ள பலமுறை எனக்கு அழைப்பு வந்தபோதும் நான் தவிர்த்து விட்டேன். காரணம், நான் ஒரு பொது ஆளுமை. திரைக்கு பின்னால் எனது தனிப்பட்ட வாழ்க்கையை கேமரா கண்கள் பதிவு செய்வதை நான் எப்போதுமே விரும்புவதில்லை என்று தெரிவித்துள்ளார் பூமிகா.