திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
தமிழில் ரோஜாக்கூட்டம், பத்ரி உள்பட பல படங்களில் நடித்தவர் பூமிகா. சமந்தா நடித்த யுடர்ன் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், ஹிந்தி பிக்பாஸ்-15 நிகழ்ச்சியில் பூமிகா பங்கேற்பதாக வெளியான ஒரு செய்திக்கு அவர் உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார்.
அதுகுறித்து பூமிகா வெளியிட்டுள்ள செய்தியில், ஹிந்தி பிக்பாஸ் -15 நிகழ்ச்சியில் நான் பங்கேற்க போவதாக வெளியான செய்தி உண்மையல்ல என்று தெரிவித்துள்ளார். அந்தநிகழ்ச்சியில் நட்சத்திர போட்டியாளராக கலந்து கொள்ள என்னை அழைத்தனர். ஆனால் எனக்கு ஆர்வம் இல்லாததால் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை தவிர்த்து விட்டேன்.
அதோடு இதற்கு முன்பு ஹிந்தி பிக்பாஸ் 1,2,3 சீசன்களில் கலந்து கொள்ள பலமுறை எனக்கு அழைப்பு வந்தபோதும் நான் தவிர்த்து விட்டேன். காரணம், நான் ஒரு பொது ஆளுமை. திரைக்கு பின்னால் எனது தனிப்பட்ட வாழ்க்கையை கேமரா கண்கள் பதிவு செய்வதை நான் எப்போதுமே விரும்புவதில்லை என்று தெரிவித்துள்ளார் பூமிகா.