மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
ஒய் திஸ் கொலவெறி பாடல் மூலம் ஒரு பாடலாசிரியராக, பாடகராக உலகம் முழுதும் பிரபலமானார் தனுஷ். அதை தொடர்ந்து சில வருட இடைவெளிக்கு பிறகு மாரி 2 படத்திற்காக தனுஷ் சாய்பல்லவி நடனத்தில் இடம் பெற்ற 'ரவுடி பேபி' பாடல் குழந்தைகளின் மனம் கவர்ந்த பாடலாக மாறி, தற்போது வரை, ஆயிரம் மில்லியன்கள் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் தனுஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் மேஜை மீது வைத்திருக்கும் கோலிசோடா பாட்டில் ஒன்றை பார்த்தபடி தனுஷ் அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்துடன், “ஹே.ய்... ஏ கோலிசோடாவே பாடல் மனதில் தோன்றிய தருணம்” என குறிப்பிட்டுள்ளார். கோலிசோடா பாட்டிலை பார்த்ததும் தான் அந்த வார்த்தையை பயன்படுத்தி பாடலை துவங்க வேண்டும் என தனுஷுக்கு தோன்றியது ஆச்சர்யம் தான்.