படம் 1% ஏமாற்றினாலும் என் வீடுதேடி வரலாம்: 'தி ராஜா சாப்' இயக்குனர் மாருதி பேச்சு | பிரியங்கா மோகனின் கன்னட படம் '666 ஆப்ரேஷன் ட்ரீம் தியேட்டர்' பர்ஸ்ட்லுக் வெளியீடு | பிரபாஸின் 'தி ராஜா சாப்' படத்தின் டிரைலர் இன்று வெளியாகவில்லை! வதந்தியை தெளிவுபடுத்திய படக்குழு! | விக்ரம் பிரபுவின் 'சிறை' படத்தை பாராட்டிய மாரி செல்வராஜ்! | 'டாக்சிக்'-ல் எலிசபெத் ஆக ஹூமா குரேஷி | ரஜினியை வைத்து முதல் மரியாதை போன்ற படம் இயக்க ஆசை! - சுதா கொங்கரா | 'பராசக்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா, எங்கே, எப்போது? | ரிலீசில் ரிகார்டு!: வசூலில் பெரும்பாடு: தமிழ் சினிமாவில் ரூ.2000 கோடியை ‛‛காலி'' செய்த 2025 | 'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை |

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் ஆகியவற்றில் தான் நடிகைகளுக்கு அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. அங்கெல்லாம் நடிகைகள் பெறும் சம்பளத்தை சாண்டல்வுட், மல்லுவுட் ஆகியவற்றில் உள்ள முன்னணி நடிகர்கள் கூட பெறுவதில்லை என்றும் சொல்வார்கள்.
கடந்த சில நாட்களாகவே சில முன்னணி பாலிவுட் நடிகைகள் புதிய படங்களுக்கு எவ்வளவு சம்பளம் கேட்கிறார்கள் என்ற தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. பாலிவுட் ஹீரோயினான கரீனா கபூர் ஹிந்தியில் உருவாக உள்ள 'சீதா' படத்தில் நடிக்க 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக தகவல் வெளியானது. ஆனால் தயாரிப்பாளர்கள் அதை கொடுக்க முன்வரவில்லை என தெரிகிறது. அடுத்து 'தி பேமிலி மேன் 2' வெப்தொடரில் நடிக்க 3 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியதாகச் சொன்னார்கள். 'ஆர்ஆர்ஆர்' படத்தில் நடிக்க ஆலியா பட்டிற்கு நாளொன்றுக்கு 50 லட்ச ரூபாய் சம்பளம் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது.
அடுத்து தீபிகா படுகோனேவின் புதிய சம்பளம் பற்றி ஒரு தகவல் வந்துள்ளது. 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் தீபிகா கதாநாயகியாக நடிக்க 8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதுதான் இந்தியாவிலேயே ஒரு நடிகைக்கு வழங்கப்படும் அதிக சம்பளம் என்றும் சொல்கிறார்கள்.
ஹீரோக்களுக்கு 100 கோடி வரை சம்பளம் வழங்கப்படும் போது ஒரு ஹீரோயினுக்கு 8 கோடி என்பதே அதிக சம்பளம் எனச் சொல்வது சரியா ?