பிரதமர் மோடி உடன் நடிகர் கமல் சந்திப்பு : கீழடி பற்றி கோரிக்கை | கூலி படத்தில் பிரீத்தி கதாபாத்திரம் கொல்லப்படுகிறதா? : ஸ்ருதிஹாசன் பதில் | இட்லி கடை படத்தின் இசை வெளியீடு எப்போது? | சிவகார்த்திகேயன் படங்களுக்கு தொடர்ந்து இசையமைக்கும் சாய் அபயன்கர் | ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கரின் மகன் | இந்த வாரம் ஆக்கிரமிக்க போகும் ஓடிடி ரிலீஸ்..! | 'கிங்டம்' படத்திற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு | புதுமுகங்களுடன் இணைந்த சோனியா அகர்வால் | பிளாஷ்பேக் : இசை அமைப்பாளர் மலேசியா வாசுதேவன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் 5 பாடல்களுக்கு நடனமாடிய லலிதா, பத்மினி |
தெய்வமகள் சீரியலில் பிரபலமான வாணி போஜன், சின்னத்திரையின் நயன்தாரா என்று அழைக்கப்பட்டார். அந்த அளவுக்கு சீரியல்களில் நடித்தே சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர்களை வைத்திருந்தார். அதையடுத்து சினிமாவுக்கு வந்து ஓ மை கடவுளே படம் மூலம் பிரபலமாகி விட்ட வாணி போஜன் தற்போது அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
அவ்வப்போது சோசியல் மீடியாவில் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளிக்கும் வாணி போஜனிடத்தில், சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வர என்ன காரணம்? என்று ஒரு ரசிகர் கேட்டபோது, சின்னத்திரையில் எத்தனை சீரியல்களில் நடித்தாலும் கிட்டத்தட்ட ஒரே சாயல் கொண்ட கேரக்டர்களாகத்தான் கிடைக்கும். ஆனால் சினிமாவில் மாறுபட்ட கதைகளில் தயாராவதால் மாறுபட்ட கேரக்டர்களில் நடிக்க முடியும். அதனால் தான் நான் சினிமாவுக்கு வந்தேன் என்று தெரிவித்திருக்கிறார்.
சினிமாவில் வெற்றி பெறுவதற்கு கவர்ச்சி, திறமை இரண்டில் எது முக்கியம்? என்று இன்னொரு ரசிகர் கேட்டதற்கு, கவர்ச்சியும் தேவை தான். என்றாலும் திறமை இருந்தால் தான் வெற்றி பெற முடியும் என்று பதில் கொடுத்துள்ளார் வாணி போஜன்.