ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அமெரிக்கா செல்கிறார். அங்கு மருத்துவ சிகிச்சை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக, சிறப்பு தனி விமானத்தில் செல்ல ஏற்பாடு நடக்கிறது.
இந்த தனி விமானத்தில், 14 பேர் பயணம் செய்யலாம். தான் மட்டுமல்லாமல், குடும்பத்தினரையும் உடன் அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளார். இந்த தனி சிறப்பு விமானத்திற்கு, மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக இரண்டு மத்திய அமைச்சர்களுடன் பேசியுள்ளார் ரஜினி.
இந்த இரண்டு அமைச்சர்களில் ஒருவர் தமிழர். அவரிடம் தமிழிலேயே பேசியுள்ளார் ரஜினி. இதையடுத்து, தனி விமானத்திற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி விட்டது.