இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தமிழ் சினிமா உலகில் சில இரண்டாம் பாகப் படங்கள் சில பல சிக்கல்களால் சிக்கிக் கொண்டிருக்கிறது என நேற்று தான் செய்தி வெளியிட்டோம். அதில் ஒரு படத்திற்கான விடிவுகாலம் என்னவென்பதை அதன் தயாரிப்பாளரும், ஹீரோவுமான விஷால் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் இளையராஜா இசையமைக்க விஷால், பிரசன்னா மற்றும் பலர் நடிக்க லண்டனில் ஆரம்பமான படம் துப்பறிவாளன் 2. அங்கு ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்ததும் படத்தின் இயக்குனர் மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். பெரும் சர்ச்சையான அந்த விவகாரம் அப்படியே முடங்கிப் போய் படமும் முடங்கி இருந்தது.
சமீபத்திய பேட்டியில் இப்படத்தை 2022ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார் விஷால். முன்னர் சொன்னபடி படத்தை அவரே இயக்கப் போகிறாராம், இசையும் இளையராஜாதான் எனக் கூறியிருக்கிறார்.
லண்டனில் காலையில் படப்பிடிப்பை லேட்டாக ஆரம்பித்து ஒரு நாளைக்கு ஒரு காட்சி மட்டுமே மிஷ்கின் எடுத்து தனக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார்.
சர்ச்சை அடங்கிப் போயிருந்த இந்த விவகாரம் விஷாலின் பேட்டியால் மீண்டும் சர்ச்சைகளை வரவக்கும் என்றே தெரிகிறது.