கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ் மற்றும் பலர் நடிக்க தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தை இந்த வருடம் அக்டோபர் 13ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை முழுவதுமாக முடிக்க முடியவில்லை.
எஞ்சியுள்ள படப்பிடிப்பை ஜுலை மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அப்படி நடத்தி முடித்தாலும் அதற்கடுத்த இரண்டு மாதங்களில் வேலைகளை முடித்து அக்டோபர் 13ம் தேதி படத்தை வெளியிட வாய்ப்பில்லை என்கிறார்கள். எனவே, படத்தை அடுத்த வருடம் 2022 ஏப்ரல் மாதத்தில் வெளியிடலாமா என யோசித்து வருகிறார்களாம்.
கொரோனா முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையே தியேட்டர்களைத் திறந்த போது தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்த்ததை விடவே அதிகம் வந்தார்கள். ஆனால், மற்ற மாநிலங்களில் அப்படி வரவில்லை. இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் ஓரிரு மாதங்கள் நீடிக்கலாம் என்கிறார்கள்.
இந்திய அளவிலும், உலக அளவிலும் படத்தை பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் அதற்கேற்றபடி படத்தை விளம்பரப்படுத்துதல், அனைத்து மொழிகளின் வேலைகளையும் முடிக்க கால அவகாசம் தேவைப்படுகிறதாம்.
அதோடு, 'ஆர்ஆர்ஆர்' பட வெளியீடு தெரிந்தால் தான் மற்ற படங்களை வெளியிடுவது பற்றியும் முடிவு செய்ய முடியும் என அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் கருதுகிறார்களாம். எனவே, படத்தின் சரியான வெளியீட்டுத் தேதியை ராஜமவுலியும், தயாரிப்பாளர்களும் சீக்கிரமே வெளியிட வேண்டும் என தெலுங்குத் திரையுலகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளார்களாம்.