ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்டிஆர், ராம் சரண், அஜய் தேவகன், ஆலியா பட், ஒலிவியா மோரிஸ் மற்றும் பலர் நடிக்க தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தை இந்த வருடம் அக்டோபர் 13ம் தேதி வெளியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பை முழுவதுமாக முடிக்க முடியவில்லை.
எஞ்சியுள்ள படப்பிடிப்பை ஜுலை மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளார்கள். அப்படி நடத்தி முடித்தாலும் அதற்கடுத்த இரண்டு மாதங்களில் வேலைகளை முடித்து அக்டோபர் 13ம் தேதி படத்தை வெளியிட வாய்ப்பில்லை என்கிறார்கள். எனவே, படத்தை அடுத்த வருடம் 2022 ஏப்ரல் மாதத்தில் வெளியிடலாமா என யோசித்து வருகிறார்களாம்.
கொரோனா முதல் அலைக்கும் இரண்டாவது அலைக்கும் இடையே தியேட்டர்களைத் திறந்த போது தெலுங்கு ரசிகர்கள் எதிர்பார்த்ததை விடவே அதிகம் வந்தார்கள். ஆனால், மற்ற மாநிலங்களில் அப்படி வரவில்லை. இரண்டாவது அலையின் தாக்கம் இன்னும் ஓரிரு மாதங்கள் நீடிக்கலாம் என்கிறார்கள்.
இந்திய அளவிலும், உலக அளவிலும் படத்தை பல மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதால் அதற்கேற்றபடி படத்தை விளம்பரப்படுத்துதல், அனைத்து மொழிகளின் வேலைகளையும் முடிக்க கால அவகாசம் தேவைப்படுகிறதாம்.
அதோடு, 'ஆர்ஆர்ஆர்' பட வெளியீடு தெரிந்தால் தான் மற்ற படங்களை வெளியிடுவது பற்றியும் முடிவு செய்ய முடியும் என அந்தப் படங்களின் தயாரிப்பாளர்கள் கருதுகிறார்களாம். எனவே, படத்தின் சரியான வெளியீட்டுத் தேதியை ராஜமவுலியும், தயாரிப்பாளர்களும் சீக்கிரமே வெளியிட வேண்டும் என தெலுங்குத் திரையுலகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளார்களாம்.