39வது பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி | அரசியல் என்ட்ரி : இளம் நடிகை அனந்திகாவின் ஆசை | அடுத்தடுத்து மூன்று பான் இந்தியா படங்களின் முன்னோட்ட வீடியோ போட்டி | மீண்டும் திரைக்கு வருகிறது அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” | விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா | 'தி ராஜா சாப்' டீசர் : தன் முந்தைய சாதனையை முறியடிக்காத பிரபாஸ் | நா.முத்துக்குமாருக்கு கரும்பு பிடிக்காதது ஏன் | ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அடுத்தடுத்து வெளியாக போகும் படங்கள் | மொழிக்காக ‛தக் லைப்' படத்திற்கு தடை விதிக்க முடியாது : உச்ச நீதிமன்றம் | வெறுப்பை பரப்பி சினிமாவை அழிக்கும் ஒரு குழு: கார்த்திக் சுப்பராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோ நாகார்ஜுனா, தமிழிலும் 'ரட்சகன், தோழா' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். திரையுலகில் அறிமுகமாகி 35 வருடங்கள் ஆனாலும், இன்னமும் தனக்கென தனி பெயரை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
டிவியில் 'மீலோ எவரு கோடீஸ்வரடு' நிகழ்ச்சியை மூன்று சீசன் தொகுத்து வழங்கியவர், அடுத்து மூன்றாவது முறையாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க உள்ளார்.
சினிமா, டிவியைத் தொடர்ந்து அடுத்து ஓடிடி தளத்திலும் கால் பதிக்க உள்ளாராம். கடந்த வருடத்திலிருந்தே அவரை வெப் தொடர்களில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வந்தது. தற்போது ஒரு முன்னணி ஓடிடி நிறுவனம் தயாரிக்க உள்ள தொடரில் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார் என டோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.
முந்தைய பேட்டி ஒன்றில் கூட தன்னிடம் இரண்டு வெப் தொடர்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறியிருந்தார் நாகார்ஜுனா. இரண்டாம் உலகப் போரை மையப்படுத்திய தொடர் ஒன்றும், டைம் டிராவல் பற்றிய தொடர் ஒன்றும் என இரண்டு கதைகள் அவரிடம் சொல்லப்பட்டுள்ளன. அவற்றில் அவர் எதில் நடிக்கப் போகிறார் என்பது விரைவில் தெரிய வரும்.