பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கொரோனா காலத்தில், தமிழ்நாட்டு நடிகைகள் அட்வைஸ் பண்ணி வீடியோ வெளியிடுவதோடு சரி. ஒரு சிலர் தான் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். சிலர் உணவுகளை வழங்கி வருகின்றனர். ஆனால் பாலிவுட், டோலிவுட், சாண்டல்வுட் நடிகைகள் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள். போதை பொருள் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற ராகிணி, சஞ்சனா கல்ராணி கூட ரோட்டில் இறங்கி வேலை செய்கிறார்கள்.
கொரோனா தொற்றின் முதல் அலையின் போது ஏழைகளுக்கு உணவு அளித்தல், ஏழை மாணவர்களுக்கு கல்வி அளித்தல் போன்ற பணிகளில் இறங்கியவர் பிரணிதா சுபாஷ். தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பிரணிதாவுக்கும் தொழில் அதிபர் நிதின் ராஜுவுக்கும் சமீபத்தில் திருமணம் நடந்தது.
தனது திருமண பரிசாக தனது அறக்கட்டளை மூலம் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கப்படும் என்று அறிவித்து இருந்தார். அதன்படி பெங்களூருவில் தடுப்பூசி முகாம் அமைத்து சொந்த செலவில் ஏழைகளுக்கு இலவச தடுப்பூசி வழங்கினார். இந்த பணியை கணவருடன் இணைந்து தொடர்ந்து செய்வேன் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.