சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

தமிழ்த் திரையுலகத்தின் நம்பர் 1 நடிகை என கடந்த சில வருடங்களாக புகழின் உச்சியில் இருப்பவர் நயன்தாரா. அவரை தெலுங்கு, மலையாளப் படங்களில் நடிக்க வைக்க அங்குள்ளவர்கள் முயற்சித்தாலும் அவர் தமிழுக்கு மட்டுமே அதிக முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார். அவரைப் பற்றி எத்தனை கிசுகிசுக்கள் வந்தாலும் அவரது இமேஜ் குறையாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது என கோலிவுட்டிலும் வியக்கிறார்கள்.
பொதுவாக, தமிழில் உச்சத்தில் இருக்கும் நடிகைகள் பாலிவுட் சென்று ஹிந்திப் படங்களில் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால், நயன்தாராவிடம் அந்த ஆசை இல்லையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அவர் நினைத்திருந்தால் பத்து வருடங்களுக்கு முன்பே பாலிவுட் சென்றிருக்கலாம், இருந்தாலும் செல்லவில்லை.
இப்போது நயன்தாராவை பாலிவுட்டிற்கு அழைத்துச் செல்லும் ஆசையில் அட்லீ இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அட்லீ இயக்கிய 'ராஜா ராணி, பிகில்' இரண்டு படங்களிலும் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். அடுத்து பாலிவுட்டில் ஷாரூக்கான் நடிக்க உள்ள படத்தை அட்லீ இயக்க உள்ளார். இப்படத்திற்காகத்தான் நயன்தாராவை நாயகியாக நடிக்க வைக்க முயற்சிக்கிறாராம் அட்லீ. அவரது அழைப்பை நயன்தாரா ஏற்றுக் கொள்வாரா அல்லது நிராகரிப்பாரா என்பது விரைவில் தெரிய வரும்.