தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
தமிழ் சினிமா உலகில் கடந்த சில வருடங்களாகவே பரபரப்பான காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இருவரும் இணைந்து பணிபுரிந்த 'நானும் ரௌடிதான்' படத்திலிருந்து இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள். அடிக்கடி வெளிநாட்டுப் பயணம், இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்கள் என இந்த காதல் ஜோடி 90ஸ் கிட்ஸ்களை நிறையவே வெறுப்பேற்றியது.
நயன்தாரா தமிழில் முன்னணி நடிகையாகவும், அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருப்பதால்தான் திருமணத்தை தள்ளி வைத்துள்ளார் என்ற தகவல் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சாட் செய்தார் விக்னேஷ் சிவன். அப்போது ஒரு ரசிகர், “நயன்தாராவை இன்னும் ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனக் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு விக்னேஷ் சிவன், “ரொம்ப செலவு ஆகும் ப்ரோ. கல்யாணம் மற்றவற்றிற்கு... அதனால், திருமணத்திற்காக பணம் சேர்த்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா செல்வதற்காகக் காத்திருக்கிறேன்,” என பதிலளித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை இப்போதுதான் கடந்து கொண்டிருக்கிறது. மூன்றாவது அலை அடுத்து வரப் போவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால் எந்த அலை முடிந்ததும் திருமணம் வைத்துக் கொள்ளப்போகிறார் விக்னேஷ் சிவன்?.