தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் தான் அவர்களது கவனத்தை பெறுவதற்காக ஏதேதோ சாகசங்களை செய்வார்கள் என்றால், சில நடிகைகளின் ரசிகர்களும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடவே செய்கின்றனர். அந்தவகையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை சந்திப்பதற்காக அவரது தீவிர ரசிகர் ஒருவர் 900 கிமீ பயணித்து அவரது வீட்டை தேடி வந்துள்ளார்.
ஆனாலும் ராஷ்மிகா தற்போது மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதால் அந்த ரசிகரின் நோக்கம் நிறைவேறாமல் போனது.. கூகுள் மேப்புடன் ராஷ்மிகாவின் வீட்டை அவர் தேடிக்கொண்டிருந்ததை அறிந்த போலீசார் அவரை அழைத்து அறிவுரை கூறி அவரது ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த செய்தி ராஷ்மிகாவின் கவனத்திற்கு வரவே இதுகுறித்து வருத்தப்பட்டுள்ள அவர், ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் “உங்களில் ஒருவர் என்னை சந்திக்க ரொம்ப தொலைவு பயணித்து வந்ததாக கேள்விப்பட்டேன்.. நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். அந்த ரசிகரை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிகிறது. தயவுசெய்து இதுபோல யாரும் என்னை தேடி வரவேண்டாம்.. நானே உங்களை நேரில் சந்திக்கும் ஒருநாள் வரும். அப்போது சந்திப்போம்” என கூறியுள்ளார்..