ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பிரபல ஹீரோக்களின் ரசிகர்கள் தான் அவர்களது கவனத்தை பெறுவதற்காக ஏதேதோ சாகசங்களை செய்வார்கள் என்றால், சில நடிகைகளின் ரசிகர்களும் இதுபோன்ற வேலைகளில் ஈடுபடவே செய்கின்றனர். அந்தவகையில் நடிகை ராஷ்மிகா மந்தனாவை சந்திப்பதற்காக அவரது தீவிர ரசிகர் ஒருவர் 900 கிமீ பயணித்து அவரது வீட்டை தேடி வந்துள்ளார்.
ஆனாலும் ராஷ்மிகா தற்போது மும்பையில் படப்பிடிப்பில் இருப்பதால் அந்த ரசிகரின் நோக்கம் நிறைவேறாமல் போனது.. கூகுள் மேப்புடன் ராஷ்மிகாவின் வீட்டை அவர் தேடிக்கொண்டிருந்ததை அறிந்த போலீசார் அவரை அழைத்து அறிவுரை கூறி அவரது ஊருக்கு திருப்பி அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த செய்தி ராஷ்மிகாவின் கவனத்திற்கு வரவே இதுகுறித்து வருத்தப்பட்டுள்ள அவர், ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் “உங்களில் ஒருவர் என்னை சந்திக்க ரொம்ப தொலைவு பயணித்து வந்ததாக கேள்விப்பட்டேன்.. நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். அந்த ரசிகரை சந்திக்க முடியாமல் போனது வருத்தமளிகிறது. தயவுசெய்து இதுபோல யாரும் என்னை தேடி வரவேண்டாம்.. நானே உங்களை நேரில் சந்திக்கும் ஒருநாள் வரும். அப்போது சந்திப்போம்” என கூறியுள்ளார்..