ரிலீஸாகாத ‛மஞ்சும்மேல் பாய்ஸ்' பட நடிகரின் பட காட்சிகள் ஆன்லைனில் லீக் ; உதவி இயக்குனர் மீது புகார் | நிவின்பாலி மீதான மோசடி வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்த நீதிமன்றம் | இந்தாண்டு பல பாடங்களை கற்றுத் தந்தது : ஹன்சிகா | வேட்பு மனு நிராகரிப்பு சரிதான் ; பெண் தயாரிப்பாளரின் கோரிக்கையை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | 2வது திருமண சர்ச்சைக்கு இடையில் முதல் மனைவியுடன் விழாவில் பங்கேற்ற மாதம்பட்டி ரங்கராஜ் | கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | முருகனாக நடித்த ஸ்ரீதேவி; 13 வயதில் ஹீரோயின் ஆனவர்: இன்று ஸ்ரீதேவியின் 62வது பிறந்தநாள் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து விமர்சனத்தில் சிக்கிய ஜான்வி கபூர்! | சினிமாவில் 50... நம்ம சூப்பர் ஸ்டாரை நானும் பாராட்டுகிறேன் : கமல் | நாகார்ஜுனாவின் வில்லன் வேடத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்த ரஜினி! |
2003ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை மந்திரா பேடி. சினிமா, டிவி தொடர்களிலும் நடித்துள்ளவர்.
தமிழில் சிம்பு நடித்த “மன்மதன் படத்திலும், சாஹோ படத்திலும் நடித்துள்ளார். தற்போது அடங்காதே படத்தில் நடித்து வருகிறார். ராஜ் கௌஷல் என்பவரை 1999ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் மந்திரா. அவர்களுக்கு பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த வருடம் தான் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தார்கள்.
இந்நிலையில் இன்று(ஜூன் 30) அதிகாலை ராஜ் கௌஷல் மாரடைப்பு காரணமாக திடீர் மரணமடைந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் இருவரும் தங்களது நண்பர்களுடன் பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார்கள். அன்று தான் தன் மனைவி, குழந்தைகளுடன் புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியடைந்துள்ளார். அடுத்த சில தினங்களுக்குள் இந்தத் துயர சம்பவம் நடந்துள்ளது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜ் கௌஷல் திரைப்பட இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். “அந்தோணி கோன் ஹை, ஷாதி கா லாடூ, பியார் மெயின் கபி கபி ஆகிய படங்களை இயக்கியுள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
கணவரின் உடலை அவரே சுமந்து சென்றதோடு, இறுதிச்சடங்கின் போது வைக்கப்படும் கொள்ளி என சொல்லப்படும் அந்த சட்டியை கையில் ஏந்தி கண் கலங்கியபடி சென்ற போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, பார்ப்பவர் நெஞ்சையும் உருக்கியது.