தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

கேரளா அருகே அரபிக் கடலில் இருக்கிறது லட்சத் தீவுகள். இங்கு பல ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த தீவு மக்கள் மீது மத்திய அரசு பல்வேறு கெடுபிடிகளை கொண்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மலையாள நடிகையும், இயக்குனருமான ஆயிஷா சுல்தானா "மத்திய அரசு, லட்சத் தீவு மக்கள் மீது பயோ வார் நடத்துவதாகவும், கொரோனாவை பரப்புவதாகவும்" குற்றம் சாட்டினார். இதனால் இவர் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆயிஷாவுக்கு கேரள உயர்நீதி மன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது.
இந்த நிலையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆயிஷா சுல்தானா, ‛‛லட்சதீவில் என்ன நடக்கிறது என்பது குறித்தும், நான் தெரிவித்த கருத்தை தொடர்ந்து எனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் வைத்தும் ஒரு சினிமா இயக்கப் போகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.